சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் கூட்டணி!

264
தேசிய அரசாங்கத்தினுள் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

சுதந்திரக் கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் பிரதியமைச்சர்களுக்கு அமைச்சின் செயற்பாடுகளில் உரிய அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின் மத்தியஸ்தத்துடன் தீர்த்துக் கொள்ளவும் இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கூட்டணிக்கு முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்தினவின் மகனும், மகாவலி அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனுராத ஜயரத்ன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் கிராமிய மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு கூடுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதியமைச்சர்கள் கூட்டணியின் பின்னால் நின்று செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

my3

SHARE