மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை-ரணில்

248

எவ்வகையான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் 68வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் பின்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்களுக்கு அலரி மாளிகையில் தேநீர் விருந்தொன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது யோசித்த ராஜபக்ஷவின் கைது தொடர்பாக ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் பிரதமரிடம் வினவியுள்ளனர். இதற்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்துள்ளது.

எனினும் அதனை மறுத்துள்ள பிரதமர், ராஜபக்ஷவினர் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் இன்றி அவர்களை கைது செய்ய முடியாது.

அதிலும் என்னதான் ஆதாரங்கள் இருந்தாலும், மோசடிகள் செய்திருந்தாலும் மஹிந்தவையோ, ஷிரந்தியையோ கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் மீது உள்ள மரியாதையின் காரணமாக அதற்கு நான் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE