மரண தண்டனை தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 பேரின் தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது இந்த குழு அமைக்கப்பட்டது.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 60 பேரின் நிலை தொடர்பிலும் இந்தக்குழு தமது பரிந்துரைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை மரண தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாகவே மாற்றப்பட்டு வருகின்றன.
எனினும், நாட்டில் பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மரண தண்டனை செயற்படுத்தப்படவேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.