இராகலை ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்பு

305

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று மாலை வேளையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலகளுக்கு அமைய குறித்த சிசுவின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தாய் சிசுவை பிரசவித்தவுடனே இவ்வாறு ஆற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிசுவை பிரசவித்த தாயை இனங்கண்டு கைது செய்யவுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

B4-320x160 sfdhdl

SHARE