பாடசாலை ஒன்றிற்குள் அடைக்களம் புக நினைத்த முதலை!

525

பிபிலை பிரதேச பாடசாலை ஒன்றிற்குள் முதலை ஒன்று செல்ல எத்தனித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியில் அமைந்துள்ள வேகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புதர் ஒன்றில் இருந்த வேளை இந்த முதலையை பிரதேசவாசிகள் கண்ணுற்றதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரதேசவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முதலையினைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த பாடசாலையின் மாணவர்களும் அருகில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Evening-Tamil-News-Paper_12471735478

மேலும் 50 வருடங்கள் பழமையான இந்தக் கிராமத்திற்குள் முதலை ஒன்று வந்தது இதுவே முதல் தடவை என கிராமவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நீர் அகழி ஒன்றினூடாக முதலை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது என்று தெரிவித்ததோடு, இந்த முதலையின் வருகையினைத் தொடர்ந்து இந்தக் கிராமவாசிகள் மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE