மாத்தளை மாவட்டம் கலேவெல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்படி விபத்தானது பஸ் வண்டி மோர்ட்டார் சைக்கிள் மீது மோதியமையினாலே இடம்பெற்றள்ளது.
மோட்டார் சைக்கிளில் மோதிய பஸ் வண்டி பின்னர் மரத்திலும் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் கலேவேல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.