பிரசாந்தனின் விளக்கமறியல் 23ம் திகதி வரை நீடிப்பு

252
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரின் விளக்கமறியல் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்த பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை பிணை கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் சார்பில் செய்யப்பட்ட மனு நாளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE