கடந்த பல வருடங்களாக மேற்படி தொண்டர்கள் கடமையாற்றிய நிலையில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாததுடன் தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாகாணசபையின் 45ம் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாகாணசபைக்கு முன்பாக கூடியதுடன் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி நின்றனர்.
மேலும் தாம் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்கள். இந்நிலையில் சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மேற்படி சுகாதார தொண்டர்களை சந்தித்து பேசினர்.
இதன்போது மத்திய சுகாதார அமைச்சின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், முன்னுரிமை அடிப்படையில் 34 தொண்டர்களின் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன் விரைவில் நியமனம் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் மேற்படி சுகாதார தொண்டர்கள் கலைந்து சென்றுள்ளனர்.