பிரபல தொழிலதிபர் சிசிலி கொதலாவலவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிசிலி கொதலாவல கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது கைது செய்யப்பட்டிருந்தார்.
கோல்டன் கீ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சிசிலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.