மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து
ரூபாய் 2,50,000-00 நிதி ஒதுக்கப்பட்டு ஏற்க்கனவே கடந்த ஆண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த நீர்த்தாங்கியை மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு 05-02-2016 அன்று இடம்பெற்றது.
பாடசாலைக்கு விஜயம் செய்த வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களும் மடு வலைய கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.