மன்னார் மாவட்டத்தின் இந்து ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்றவற்றை புனரமைக்க, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து கடந்த ஆண்டு நிதி ஒதுக்கி ஏற்க்கனவே திட்டங்கள் முடிவுற்ற ஆண்டான்குளம் பள்ளிவாசல் பிட்டி பள்ளிவாசலுக்கும், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வட்டக்கண்டல், பிள்ளையார் கோவில் பிள்ளையார்பிட்டி, அன்னை வேளாங்கன்னி ஆலயம் இரணைஇலுப்பைக்குளம் ஆகியவற்றுக்கான காசோலைகளை உத்தியோக பூர்வமாக அவர்களது இடங்களுக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் ஆகியோர் இணைந்த குழுவினர் வளங்கிவைத்தனர்.