இலங்கையின் புதிய சட்டமா அதிபராக ஜெயந்த ஜெயசூரிய இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பதவியில் இருந்த சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர கடந்த ஜனவரி 10ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற நிலையிலேயே புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த பதவிக்கு பதில் சட்டமா அதிபராக செயற்பட்டு வந்த சுகத கம்லத் நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதும், ஜெயசூரியவின் பெயரை நேற்று அரசியலமைப்பு சபை, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இதனடிப்படையில் இலங்கையின் 45ஆவது சட்டமா அதிபராக ஜெயசூரிய இன்று பதவியேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.