மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தியுள்ளது! மஹிந்த

254

மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கடற்கரைப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எவ்வளவு மூடி மறைத்தாலும் கலப்பு நீதிமன்றம் மூலம் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணை நடத்தப்படுவதனை தடுக்க முடியாது.

இராணுவம் ஏதேனும் தவறிழைத்திருந்தால் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சயிட் அல் ஹூசெய்ன் தெரிவிக்கின்றார்.

இதன் மூலம் முழு இராணுவத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை மூடி மறைக்க முடியாது.

எவ்வளவு மக்களை பிழையாக வழிநடத்தினாலும் கலப்பு நீதிமன்றம் அமுல்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகும்.

எனக்கு தெரியும் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பில் நீண்ட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

நாம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய நமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விசாரணை நடத்தும் நடவடிக்கை காலம் தாழ்த்தப்பட்டிருந்தது நாம் அதனை துரிதப்படுத்த முயற்சிக்கின்றோம்.

போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்திராவிட்டால் இவ்வாறான எந்தப் பிரச்சினையும் கிடையாது.

எமது நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினையும் மூடி மறைக்கப்பட்டுள்ளன என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE