ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விலகிய நீதித்துறை

237
நள்ளிரவில் அதிகாரத் தரப்பினரிடம் இருந்து கிடைக்கும் தொலைபேசி அழைப்புக்கு  பயந்து தனது கௌரவத்தை இழந்த மற்றும் பாழ்ப்படுத்திக்கொண்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது.

நீதித்துறையில் தற்போது சுதந்திரம் ஏற்பட்டுள்ளதுடன் அதனை வெளிப்படையாக காணவும் முடிகிறது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை ஒதுக்கி வைத்து விட்டு நோக்கும் போது, மேல் நீதிமன்றம் உட்பட அதற்கு கீழ்மட்டத்திலான நீதிமன்றங்களின் நீதவான்கள் சட்டத்திற்கு அமைய செயற்பட்டு வருகின்றமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இதற்கு சிறந்த உதாரணம் கலகொட அத்தே ஞானசார என்ற திருட்டு துறவி கைது செய்யப்பட்டமையாகும்.

இந்த நபர் நாட்டின் பாதுகாப்பு என்று கூறி மீண்டும் பிறந்த தேவதர்மவாதியின் வேஷத்தில் குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் முழு நாட்டை விளையாட்டுக்கு எடுத்துக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என்பதுடன் இறுதியான சந்தர்ப்பமும் அல்ல.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆட்சியாளர்களின் குடும்பத்தினரின் அனுசரணையுடன் பௌத்த பாதுகாகவலன் என்ற போர்வையில், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கு ஊடகங்களும் முன்னுரிமை கொடுத்து வந்தன.

உணர்ச்சியை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை செய்தியாக வெளியிடுவதில்லை ஊடகங்கள் பேராசை காட்டு வருகின்றன.   பத்திரிகைகள் என கூறிக்கொள்ளும் சில பத்திரிகைகளுக்கு இவ்வாறான செய்திகளே வருமானத்தை பெற்றுக்கொடுக்கின்றன. புனைப்படும் செய்திகளுக்கு பாரிய முக்கியத்துவம் கிடைக்கின்றது. சிலர் அடிப்படையற்ற வதந்திகளை கூட உண்மை என காட்ட முற்படுகின்றனர். மேலும் சிலர் பொய்களை புனைக்கின்றனர்.

ஊடகங்களுக்கு சில வரையறை இருக்க வேண்டும்.  அந்த வரையறை  மீறி செல்லும் போது வாசகர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும். அது மாத்திரம் அல்ல செய்தியை எழுதும் நபர் மற்றும் அதனை வெளியிடும் நபர்களின் மீதுள்ள நம்பிக்கையும் அற்று போகும்.
mry-445x330
“ இது ஆரம்பம் மாத்திரமே, எமது போராட்டத்தை நாங்கள் காட்டிக்கொடுக்கவில்லை. எனக்கு இரண்டு நாள் அவகாசம் தாருங்கள்” என கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து இந்த பிக்கு  அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கூறினார். அப்போது எதிர்ப்புகள் எல்லை மீறிக்கொண்டிருந்தன.  இவர் போன்ற தலை வீங்கிய நபர்களால் மாத்திரமே இவ்வாறான கதைகளை கூற முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த பிக்குவின் கைது பற்றி எதனையும் கூறவில்லை. இவ்வாறு அமைதியாக இருப்பதே சரியானது.

அதிகார வெறியில் சில பிக்குமார் வரபு மீறி செயற்படுவதை காணமுடியும்.  பயந்த அரசியல்வாதிகள் இவர்களுக்கு வழங்கும் அவசியமற்ற அதிகாரம் மற்றும் செல்வத்தை வழங்குகின்றனர்.

நாடு என்ற எண்ணக்கருவில் இருந்து விலகி தெரிவு செய்யப்பட்ட மதம் ஒன்றுக்கு மாத்திரம் விசேட அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகளால்,  நாட்டின் ஒழுக்கத்திற்கு கேடு விளைகின்றது.

ஒழுக்கமும் நன்நெறியும் பிறக்க வேண்டிய விகாரைகள், ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் அது சீர்கெட்டு போகிறது. சாதாரண வாசஸ்தலத்திற்கு பதிலாக பிக்குமார், பூசகர்கள், இமாம்கள் வாழும் மாடமாளிகைகளை நாட்டின் அனைத்து இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

ஜாதியை அடிப்படையாக கொண்டே பௌத்த நிகாய பீடங்கள் ஏற்பட்டன. பெரிய நிர்மாணிப்புகள் மற்றும் பண்டைய காலத்து மன்னர்களில் விசிஷ்டமான நிர்மாண தொழிற்நுட்பத்தால்  நாட்டின் வரலாறு சிறப்பு பெற்றுள்ளது. புத்த பகவானின் பாரிய சிலைகளும் நீர்பாசன வழிகளும் இதற்கு சான்றுகள்.

நம்பிக்கை என்பது பொறுத்து கொள்வதற்கு மட்டும் போதுமானதல்ல வரலாற்றில் பல நாடுகள் வீழ்ந்தும் உள்ளன, எழுச்சி பெற்றும் உள்ளன.

நவீன உலகத்தில் மனிதனுக்கு கிடைத்திருக்கும் பணம் , தொழிற்நுட்ப முன்னேற்றமும் பின்னால் விரட்டி வரும் ஒரு கெடுதியும் உள்ளது.

எனினும் சிறந்த ஞானமுள்ளவர்கள், ஒழுக்கம் மற்றும் சீர்கெட்ட ஒழுக்கத்தையும் பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அப்படியானவர்கள் சிந்தித்து பார்க்க தயங்குவதில்லை. உலகில் மனிதன் மாத்திரமே சிறப்பான இயல்புகளை கொண்டுள்ள விலங்கு என்பதால்,  பகுத்தறியும் ஆற்றலை கொண்டுள்ளான்.  இந்த யுகமானது உருவாக்கத்தின் முடிவு அல்ல.

கலகொடஅத்தே ஞானசார என்பவர் இறுதியான மோசடிமிக்க பிக்கு அல்ல. ராஜபக்சவின் இறுதியான 5 வருடங்களில் ஞானசாரவினால் வெளிக்காட்டப்பட்ட நிலைமையை தற்போது காணமுடியவில்லை.

இவ்வாறான சமூகத்தை அழிக்கும் சக்திகளுக்கு அனுசரணை வழங்காது தவிர்க்கும் தலைமைத்துவம் நாட்டில் இருப்பது அதிஷ்டவசமானது.

கலகொடஅத்தே ஞானசார  என்பவர் நோய் அல்ல, வைரசும் அல்ல அவற்றை காவிச் செல்லும் ஊடகம்.

சட்டத்தை மீற வேண்டுமானால், ஆட்சியை பிடிக்க அதனை செய்யுங்கள். மற்ற சகல சந்தர்ப்பங்களிலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடங்கள்- ஜூலியஸ் சீசர்

SHARE