எமது பிரச்சினைகளைத் தீர்ப்பது அரசின் கடமை – வடகிழக்கு மக்கள்

274
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் மற்றும், மீனவர்களின் பிரச்சினைகளை முதன்மைபடுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணி உரிமை தொடர்பான மக்கள் இயக்கம், முள்ளிக்குளம் காணி பாதுகாப்பு இயக்கம், வடமாகாண மீனவ சங்கங்கள் உள்ளிட்ட 15 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த எதிரப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளன.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும், இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஆரப்பாட்டம் காரணமாக அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகளம் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், கலகத்தடுப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், நீர்தரைபிரயோக வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜரை ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிப்பதற்காக பிரதிநிதிகள் சிலரை பொலிஸார் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE