ஒழுக்க விதிகளை மீறுவோரை தண்டிக்கும் நோக்கில் மைத்திரி தலைமையில் விசேட கூட்டம்!

270

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களை தண்டிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செற்குழு இன்று விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி கருத்து வெளியிடுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகித்துக் கொண்டு கட்சியை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கும் நோக்கில் இந்த விசேட மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கட்சியை விமர்சனம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியையும் கட்சித் தலைமையும் விமர்சனம் செய்யும் எட்டு சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக முன்னதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE