எம்பிலிப்பிட்டிய இளைஞனின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் பெற ஐந்து பொலிசாருக்கு சீ.ஐ.டி. அழைப்பு!

234

எம்பிலிப்பிட்டிய இளைஞனின் சந்தேக மரணம் தொடர்பாக வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐந்து பொலிசாருக்கு சீ.ஐ.டி. யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி ஐந்தாம் திகதி எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்ற விருந்து வைபவம் ஒன்றில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி சுமித் ஜயவர்த்தன எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

இவரது மரணம் தொடர்பாக பிரதேசத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் மேலும் ஐந்து பொலிசாருக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது

எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வாக்குமூலம் அளிக்கவுள்ளனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக நீண்ட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பாக பிரதேசத்தின் ஏராளமான பொதுமக்கள் பொலிசாருக்கு எதிராகவே வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் எதிர்வரும் வாரமளவில் பொலிசாருக்கு ஆதரவாக சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

3128-embilipiya-youth-death837749403

SHARE