முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகார மற்றும் மக்கள் தொடர்புக் காரியாலயம் இன்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் திறப்புவிழாவில் கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரமுகர்களும் மற்றும் மஹிந்த அணி ஆதரவாளர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.