ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அலுவலக செலவினங்களுக்காக ஒருகோடி ரூபா மேலதிக நிதியொதுக்கீட்டுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க இக்குறைநிரப்புப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் கீழ் வரும் மீளிணக்கத்துக்கான அதிகார சபை, விசேட கருத்திட்ட அமைச்சு உள்ளிட்டவற்றின் அலுவலக செயற்பாடுகளுக்காக இந்த நிதியொதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் பல அமைச்சுகளும் தங்களது செயற்பாடுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீட்டைக் கோரி குறைநிரப்புப் பிரேரணைகளை நேற்று சமர்ப்பித்துள்ளன.