முஸ்லீம்களின் மீழ்குடியேற்றம் சம்மந்தமாக அன்று கிளிநொச்சியில் பிரபாகரன் தெரிவித்ததை – தமிழ் தேசிய கூட்டமைப்பு

341

 

 கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் முஸ்லீம் தமிழ் மக்களின் மீழ்குடியேற்றம் பற்றிய விசேட கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி கூட்டத்தில் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, காதர் மஸ்தான் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், வட மாகாண சபை உறுப்பினர்களான கமலேஸ்வரன், ரவிகரன், ஜெனோபர் ஆகியோர் பங்கு பற்றினர். நிர்வாக ரீதியில் அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளும் பங்கு பற்றினர். 25.01.2016 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முஸ்லீம் மக்களின் மீழ்குடியேற்றம் பற்றிய பலத்த வாதபிரதிவாதங்களின் முடிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் சி.சிவமோகன் தலைமையாக கொண்டு பிறிதொரு திகதியில் தனியாக விவாதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
b8dd7581-a586-48c7-a8fd-489f9895a6ba be43b98a-bfe5-4e8d-8ba9-344c26052416
அந்த முடிவின் பிரகாரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கி அந்தப்பிரச்சனைக்கு முடிவு கொண்டுவரப்பட்டது. அதன் படி இறுதியில் நடந்த ஊடக சந்திப்பில் பின்வரும் விடயங்களை தீர்மானமாக வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
1. தமிழ் பேசும் தமிழ் முஸ்லீம் மக்களின் நியாயமான மீழ்குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கும், அதன்படி அரச காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படும்
2. வெளி மாவட்டத்தவர்களுக்கு அரச காணிகளோ, வீட்டுத்திட்டங்களோ வழங்கப்பட மாட்டாது.
3. காடழிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
4. வீட்டுத்திட்டம் வழங்குவது பற்றி தனியான திகதியில் மீண்டும் கலந்துரையாடல்.
கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுத்த பகிரங்க அழைப்பில், முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களுடன் சமத்துவமாக ஏற்றுக்கொண்டு மீழ்குடியேறுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கொள்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேற்படி முடிவுகள் அனைவராலும் வரவேற்கப்பட்டது குறிப்பிடதக்கது.
SHARE