புலம்பெயர் உறவுகள் தாயக மண்ணில் முதலீடுகளை செய்ய வேண்டும் – சிவமோகன்

235
புலம்பெயர் உறவுகள் தமது தாயக மண்ணில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டுமென வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்குடியிருப்பில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது தேசத்தில் புலம் பெயர் உறவுகள் முதலீடு செய்யும் பொழுது, போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

போரின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட எமது இளைஞர் யுவதிகள் பெருமளவில் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். எனவே முதலீடுகளை செய்யும் பொழுது அவர்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என்றார்.

SHARE