தலவாக்கலையில் ஆலயம் உடைப்பு – உண்டியல் பணமும் கொள்ளை

280
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம், அம்மன் கழுத்தில் இருந்த தாலி என்பன திருடப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, கடந்த மாதம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றும் பூஜைகள் இடம்பெற்று பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு வீடு திரும்பிய பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE