பேரூந்தில் ஏற முற்பட்ட நபர் தவறி விழுந்து மரணம்

258
கடுவெல, ஹங்வெல்ல பிரதேசத்தில் பேரூந்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது, பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஒன்றிலேயே இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பலியான நபர் 48 வயதுடைய டிக்கோயா, பட்டல்கல தோட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

accident2

 

SHARE