மத்திய அரசாங்கத்தின் நிதி முழுமையாக செலவிடப்படும்: வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழில்

315

 

மத்திய அரசாங்கத்தின் நிதி முழுமையாக செலவிடப்படும்: வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழில்
reg-626x380

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்படவுள்ளதாக வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

லங்காசிறி 24 செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வட மாகாணத்திற்காக மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 40 வீதம் மாத்திரமே கடந்த காலங்களில் செலவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 60 வீத நிதி திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இனிவரும் காலங்களில் அவ்வாறு செயற்படாமல் வட மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் முழுமையான தொகையை தான் அபிவிருத்தி பணிகளுக்கு செலவிட எண்ணியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நம்பிக்கை வெளியிட்டார்.

தான் வட மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டமையை இட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, லங்காசிறியுடனான நேர்காணலின் போது வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழிலும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE