பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் முல்லைத்தீவில் விடுமுறை விடுதி
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தலமையில் 14.02.2016
அன்று இடம் பெற்ற நிகழ்வில் 2 மாடி கொண்ட 25 அறைகளைக் கொண்ட விடுமுறை
விடுதி முல்லைத்தீவில் புனர்நிர்மானம் செய்து வைபவ ரீதியாக பொது நிர்வாகம்
மற்றும்முகாமத்துவ அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே
அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் பொழுது இவ்
விடுதியில் தங்கி நின்று தங்கள் பயணங்களை மேற் கொள்வதற்கு வட மாகாண பிரதித்
தவிசாளர் அன்ரனி ஜெகநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு பிரதமரீதியாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கௌரவ
பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களும் முல்லைத்தீவு மேலதிக
அரசாங்க அதிபர் இ.மோகனதாஸ் அவர்களும் மதகுருமார்களும் முல்லைத்தீவு இராணுவ
பொறுப்பதிகாரி அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
புளியங்குளம்.
கோபிகா.