நிதி அமைச்சில் நேற்று மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும கூறுகையில்…,
மக்கள் விரோத நிலைப்பாடுகளை ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது, கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் வார இறுதி ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த பிரதான செய்தி பொய்யானது.
வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளாது அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கில் சில தரப்பினர் பொய்hயன செய்திகளை பிரச்சாரம் செய்கின்றனர்.
பொய்யான செய்திகளை வெளியிடுவதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் அச்சமடையக் கூடும்.
இவ்வாறான பொய்யான செய்திகளை பிரசூரிக்கும் போது எங்கள் பக்கத்தின் தகவல்களையும் சற்றே கேட்டறிந்து கொள்ளவும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நாம் நல்லாட்சியை ஏற்படுத்தினோம். ஊடகங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியிருந்தோம்.
இந்த ஊடக சுதந்திரத்தை மிகவும் மோசமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். அனைத்து ஊடகங்களும் அல்ல சில ஊடகங்கள் எமது வெற்றிப் பயணத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறு பொய்யான செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.