மாரப்பன மற்றும் பொன்சேகா விரைவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

258
நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் மாரப்பன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இந்த இருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மறைந்த எம்.கே.டி.எஸ். குணவர்தன வகித்து வந்த காணி அமைச்சு திலக் மாரப்பனவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திலக் மாரப்பன நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணியாக கடமையாற்றியமை, நாடாளுமன்றில் நிறுவனம் சார்பாக பேசியமை ஆகிய காரணங்களினால் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அபிவிருத்தி சார்பான ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாண மெகா பொலிஸ் அமைச்சு வழங்கப்படலாம் தெரிவிக்கப்படுகிறது.

படைவீரர் நலன்புரி அமைச்சுப் வழங்கப்படும் என முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் திலக் மாரப்பன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.

sarath-fonseka-2009-12-13-6-40-0

SHARE