தெற்கு அதிவேக பாதையில் பாரிய விபத்து

262
தெற்கு அதிவேக பாதை, பின்னதுவ பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

சிற்றூர்தியுடன் பஸ்ஸொன்றும் ஜீப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்தவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் மூவரும் அடங்குவதோடு அவர்கள் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதையில் உடும்பொன்று பாய்ந்தமையினால் அதை காப்பாற்ற நினைத்த சிற்றூர்தி சாரதி ஓடுபாதை திசையை மாற்றியமையினால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

accident-logo1-620x330

 

SHARE