வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பணியாற்றும் 18 பேர் தங்கள் கடமையை புறக்கணித்து 9 கோரிக்கைகளை முன் வைத்து இக் கோரிக்கைகளுக்கு தீர்வு தரப்படாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுச் சபையின் செயற்பாடு காரணமாகவும் கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் தொடர்பாகவும் பாரபட்சம் காட்டி இடமாற்றம் செய்யப்பட்டு நீண்டகால பணியாளர்களே பணியிலிருந்து இடை நிறுத்துவது தொடர்பாகவும் இதனைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன் நேரில் சென்று குறைபாடுகளையும் கேட்டறிந்துள்ளார். இச் சம்பவம்தொடர்பாக வவுனியா வடக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரிடம் கேட்ட போது தலைவர் வி.அருளாணந்தம் அவர்கள் இவ் விடயம் எதுவும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்களும் தகவலும்:- கோபிகா, புளியங்குளம்.