முருகதாஸை சந்திக்கும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி அஜித்துடன்மீண்டும் எப்போது கைக்கோர்ப்பீர்கள் என்பது தான். சமீபத்தில் ஒரு விழாவில் இவரிடம் அஜித் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ‘கண்டிப்பாக ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் நான் அஜித் சாருக்கான கதையை கையில் எடுப்பேன்.
கதை முழுவதுமாக ரெடியாகி விட்டது, அதிவிரைவில் அவருடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவேன்’ என கூறியுள்ளார்.