திகாரிய பகுதியில் செப்பு உலோகத்திலான புத்தர் சிலையுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நால்வரும் நிட்டம்புவை – திகாரிய பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர்.
கடத்தப்பட்ட புத்தர் சிலை ஒரு கிலோ 110 கிராம் நிறையுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தனகல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.