ரணில் ஊடகங்களுக்கு எச்சரிக்கை

266

அரச மருத்துவ சம்மேளனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மீது விசாரணை நடத்துமாறு தமது அலுவலகம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை பிரதமர் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு இணங்கவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீதும் விசாரணை நடத்தப்படுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அரச மருத்துவர் அதிகாரிகள் சம்மேளனம் விலைக்கு போனதை தம்மால் நிரூபிக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தம்மை சந்தித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பாதெனிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இடம்பெற்றமையை பற்றி பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அவர்கள், இந்த விடயத்தை பேச வேண்டாம் என்று தாம் கோருவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை தமது அரசாங்கத்துக்கு ஒரு மில்லியன் தொழில்வாய்ப்புக்களை வழங்க மக்கள் ஆணை கொடுத்துள்ளனர். இதனை தடுக்க ஊடகங்கள் முயலுமானால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வீதிப்போராட்டங்கள் நடத்த வேண்டியேற்படும் என்றும் ரணில் எச்சரித்துள்ளார்.

குறித்த நிறுவனங்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட முயலக்கூடாது என்றும் ரணில் கோரியுள்ளார்.

ranil-japan

SHARE