விடுதலைப்புலிகளுடன் கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு

252

விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருடன் கைது செய்யப்பட்ட இந்திய பொதுமகன் ஒருவரை விடுவிக்க சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மறுத்துள்ளது.

நேற்று இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தபோது இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சயனைட் குப்பிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் உச்சிப்புளியில் வைத்து கடந்த ஜூலையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே. கிருஸ்ணகுமார், என். ராஜேந்திரன் ஆகியோருடன் ஆர் சசிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் அல்லர் என்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

judgement

SHARE