2014ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியினால் முன்வைக்கப்பட்ட செய்மதி திட்டத்துக்கு இலங்கை மாத்திரமே உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பாகிஸ்தான் உட்பட்ட ஏனைய நாடுகள் இன்னும் தமது உத்தியோகபூர்வ உடன்பாட்டை வெளியிடவில்லை.
இந்தநிலையில் குறித்த செய்மதி திட்டத்தை பயன்படுத்தி இந்தியா, தமது முக்கிய தரவுகளை கண்டுபிடித்துவிடுமா என்ற அச்சம் காரணமாகவே பாகிஸ்தான் அதற்கு உடன்பாட்டை வெளியிடாமல் இருந்து வருகிறது.
இதேவேளை குறித்த செய்மதிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது 2017 ஆரம்பத்தில் தமது பணிகளை ஆரம்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சார்க் நாடுகளின் தொலைத்தொடர்பு, ஒலி, ஒளிபரப்பு, அனர்த்த முகாமை, போன்றவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த செய்மதி திட்டத்தை இந்தியா பரிந்துரைத்திருந்தது என்று இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.