பதுளை – கொழும்பு பிரதான வீதியின் உடவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஜுப் வண்டியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்குநேர் மோதுண்டே நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஐந்து வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 6ஆவது கஜபா ரெஜிமேன்டைச் சேர்ந்த மேஜர் எஸ்.ஏ.சமந்த மற்றும் இராணுவ சிப்பாயான ஆர்.ஏ.ஜானக்க உபுல் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தோர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.