செட்டிகுளத்தில் யானை தாக்கி முதியவர் மரணம் – மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

288

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை மேசன் வேலைக்கு கூலியாட்களைப் பார்க்க கிறிஸ்தவ குளத்திற்கு சென்ற வேளையிலேயே இவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.

துடரிக்குளத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகலவத்தை,கலகிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(18) பகல் 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான குறித்த இளைஞன் தனது இல்லத்தில் உருக்கி ஒட்டும்(வேல்டிங்) வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்க்கப்படுகின்றது.

SHARE