முன்னாள் நீதியரசர் ஷிராணிக்கு விடுதலை

269

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இவர் குறித்த வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளுக்கு செல்ல ஷராணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடை உத்தரவும் விலக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதிமன்ற கண்காணிப்பில் இருந்த ஷிராணியின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்குவதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

shirani-bandaranayake-626x380

SHARE