ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரு இலங்கைப் பெண்கள் மீட்பு

264

 

ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரண்டு இலங்கை பெண்களை அந்த நாட்டு காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

அவர்களை அடிமைகளாக நடத்திய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டுக்கு அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரகசிய அறையொன்றில் இரண்டு இலங்கைப் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE