ஒரு வாரத்திற்கு மாத்திரம் குறையும் பாணின் விலை?

260

 

ஒரு இறாத்தல் பாணின் விலையானது நான்கு ரூபாவினால் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைத் திட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நுகர்வோர் வாரம் காரணமாகவே பாணின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்ததாகவும், எனினும் இந்த விலை குறைப்பானது குறிப்பிட்ட ஒரு வாரத்திற்கு மட்டும் அமுலில் இருக்குமென அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் செயலாளர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலைக்குறைப்பானது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE