மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களுக்கே இந்த வீட்டுத் திட்டம் முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் ஜனவரி மாதம் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும், வடக்கு, கிழக்கு மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே திடீரென, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிகமாக அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம் மாவட்டங்களும் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று மாவட்டங்களும் போரின் பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டங்களின் அடிப்படையிலேயே இதில் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.