
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சுமார் 15 பேருக்கும் அதிகமானோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியாசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
உணவு விஷமானதால் வைத்தியாசாலைக்கு வரும் நோயாளிகளில் சிலர் தீவிர சிகிச்சை, அதி தீவிர சிகிச்சை பிரிவிலும் பின்னர் நோயாளர் விடுதிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, சிலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், விஷமான உணவானது புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உணவு தயாரிக்கும் நிலையமொன்றில் இருந்து பெறப்பட்டுள்ளது.
பகல் உணவிற்காக நேற்று பிரியாணி உணவுபொதிகள் பெறப்பட்டு அவற்றை சாப்பிட்டதாகவும் அதன் பின்பே தலைசுற்று, வாந்தி மயக்கம் போன்றன ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர தெரிவித்துள்ளார்.