ராஜபக்சவினருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.

315

 

கடந்த அரசாங்கத்தில் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சவினருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் இருந்து வந்த இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான பல தகவல்களை வெளியிட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.

images

ராஜபக்சவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்த தொடர்புகள் சம்பந்தமாக இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் பலவற்றை சரத் பொன்சேகா, சாட்சியங்களுடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராகி வருவதாக அவரது பணிக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்கள், விடுதலைப் புலிகளுடன் இரகசியமான தொடர்புகளை பேணி வந்ததாக இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்டு வந்ததுடன் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி, ராஜபக்ச குடும்பத்தின் முக்கிஸ்தர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் கொண்டிருந்த இரகசிய தொடர்புகள் பற்றி நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து ஸ்ரீபதி, திடீரென நடந்த வாகன விபத்தில் கொல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாகவும் அப்போது சந்தேகம் வெளியிடப்பட்டது.

SHARE