வவுனியாவில் இழுத்து மூடப்பட்டது சிறி ரெலோ அலுவலகம்

285

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள சிறிரெலோ அலுவலகம் நேற்று அக்கட்சியின் செயலாளர் எஸ்.உதயராசாவினால் மூடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர் கட்சி அலுவலகம் இயங்கி வந்த கட்டிடம் உரிமையாளரினால் கோரப்பட்டயைடுத்து மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் தமது கட்சியின் உறுப்பினர்கள் இருவர் தன்னை குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாகவும் மிக விரைவில் புதிய அலுவலகம் ஒன்றும் திறக்கப்படும் என தெரிவித்தார்.

கட்சி அலுவலகம் மூடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சிறி ரெலோ வவுனியா மாவட்ட பொறுப்பாளர் தமது கட்சி அலுவலகம் மூடப்பட்டமைக்கு கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடே காரணம் என்றும் கட்சி அலுவலகம் மூடப்பட்டமை மற்றைய உறுப்பினர்களுக்கு தெரியாது என தெரிவித்தார்.

உதயராசாவின் ஆதரவாளர்களால் கட்சி காரியாலயத்தின் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டு தீயிடப்பட்டதுடன் சிறி ரெலோவின் நீண்டகால உறுப்பினர்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

SHARE