காத்தான்குடி பிரதேசத்தில் காணாமல் போன நான்கு வயதுக் குழந்தையொன்று ஆரையம்பதி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி மீராபள்ளி வீதியைச் சேர்ந்த யாஸ் பயாஸ் எனும் நான்கு வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு ஆரையம்பதி பிரதான வீதி அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளான்.
கடந்த 20ம் திகதி வீட்டுக்கு முன்னால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனது தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியில் ஆடைகள் இன்றி குழந்தை அலைந்து கொண்டிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் குழந்தையை மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் குழந்தையின் தாயை கைது செய்த பொலிசார் பிரதேசத்தின் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முன்பு அவரை விசாரணைக்குட்படுத்திய பின்னர் குழந்தையை அவரிடம் கையளித்துள்ளனர்.
குழந்தையின் தகப்பன் இறந்து போயுள்ள நிலையில் தாயின் பராமரிப்பில் குழந்தை வளர்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.