ஜேர்மனிய நாடாளுமன்றக் குழுவென்று எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் முதலீடு செய்யும் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜேர்மனிய அதிபர் எஞ்சலா மோர்கல் இந்த உயர்மட்டக்குழுவினரை அனுப்பி வைக்க உள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பு ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜேர்மனிக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி அந்நாட்டு அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
முதலீட்டு சாத்தியம் குறித்து ஆராயும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.