அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக படைவீரர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
சம்புத்தாலோக்க விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் பௌத்த பிக்குகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
தேரவாதி கலந்துரையாடல் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் பௌத்த பிக்குகள் ஒடுக்கப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குகளுக்கு ஏன் பிணை வழங்கப்படவில்லை.
நீதிமன்றம் பிணை வழங்கவில்லை என நான் கூறவில்லை அரசாங்கமே அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
விரைவில் மஹாநாயக்க தேரர்களின் ஊடாக பௌத்த பிக்குகள் துன்புறுத்தப்படுவதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படும்.
சிறிசேனவும் ரணிலும் சம்பிக்கவும் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை.
இந்தியாவையும் மேற்குலக நாடுகளையும் திருப்திபடுத்துவதே இந்தஅசராங்கத்தின் நோக்கமாக உள்ளது.
நல்லாட்சி என் நாட்டில் எதுவும் தற்போது கிடையாது படைவீரர்களுக்கு பிணை வழங்காமல் இருப்பது அநீதியான செயற்பாடாகும் என நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.