இந்திய- இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்: கச்சதீவு திருவிழாவில் விஜயகலா

258

கச்சதீவுப் பிரதேசத்தில் அந்தோனியார் கோவில் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், இந்திய- இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

இத்திருவிழாவில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கச்சதீவு பிரதேசத்திற்கு இன்று தான் முதல் முறையாக வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும்போது மேற்குறித்த வேண்டுகோளை முன்வைக்கப் போவதாக குறிப்பிட்டார்.

SHARE