உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சியுடன் கூட்டணி அமைக்க 17 கட்சிகள் ஆயத்தம் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

317

 

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று ஹற்றன் லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுப்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம்
கிடையாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும் யாராலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்த முடியாது.

பொது தேர்தலில் சுதந்திர கட்சியில் போட்டியிட்ட மாற்று கட்சியினரே இந்த சதி முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுதந்திர கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சில விஷமிகள் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. என்னை அவ்வளவு இலகுவில் வெளியேற்ற முடியாது. நான் ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்றார்.

SHARE