பிக்குகள் உள்ளிட்ட 16 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்

260
நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிக்குகள் உள்ளிட்ட 16 பேர் மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறியே இந்த 11 பிக்குகள், 4 ஆண்களுடன், பெண்ணொருவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீதிமன்றை அவமதித்ததாகக் கூறி பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த மாதம் ஹோமாகம நீதவான் உத்தரவிட்டபோதே குறித்த பிக்குகள் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சந்தேகநபர்களுள் மேலும் ஒரு பிக்கு நேற்றைய தினம் ஹோமாகம பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும், அவரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பிக்குவும் இன்றைய தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

final-judgement

SHARE