அட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைச்சர் திகாம்பரம் 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

282

அட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தைச் சுற்றி தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தகரங்களை அகற்றி விட்டு ‘வயர் மெஸ்’ அடித்து நவீன மயப்படுத்த மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் 75 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கமைய தகரங்கள் அகற்றும் பணிகள் 29.02.2016 அன்று ஆரம்பமாகியுள்ளன.

அதனையடுத்து செய்யும் பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் திகாம்பரம் 01.03.2016 அன்று குறித்த இடத்திற்கு சென்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் அட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு புகையிரத நிலையத்தை நவீன மயப்படுத்தல், புதிய சந்தைத் தொகுதியை நிர்மாணித்தல், பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு இலங்கை புகையிரத திணைக்களம், நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இப் பணியை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

0e58e849-da71-47d2-ab43-a8a8aaaf34db 63cc1e09-26af-498e-8248-23417ef559a3 116b9352-f9d0-4f7e-9834-16a642907ec3 96094430-893c-4158-a993-121886eeccee bdb3572f-0341-46d7-807e-1935f7248cac d74a37e4-af02-4f16-bae4-12a144c5a835 db77e065-25c9-4584-a7cf-238ecc5f3ea6 ff57c377-0e6f-47a9-a26a-74d8cdbfcc70

SHARE